செய்திகள் :

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

post image

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால், கிழக்கு இம்பால் மாவட்டத்திலுள்ள தொலாய்தபி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, சஜிவா பகுதியில் அமைந்துள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த முகாம்களில் இருந்து, தங்களது கிராமத்துக்குச் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை வழியிலேயே பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர்.

தொலாய்தபி கிராமத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்திலுள்ள புகாவோ டெஸ்பூர் பகுதியில் அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தொலாய்தெபி பதற்றம் நிறைந்த மண்டலத்தினுள் வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதி முழுவதும் சி.ஆர்.பி.எஃப். பெண் காவலர் படை உள்பட ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தடுக்கப்பட்ட கிராமவாசிகள் அனைவரும், வன்முறையில் தங்களது வீடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது தங்களுக்கு தெரியும் என்றும், தங்களது நிலங்களை பார்க்க மட்டுமே அவர்கள் அங்கு செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளனர்.

இதனால், அவர்கள் அனைவரும் அங்கேயே உட்கார்ந்து சில நிமிடங்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளூர் தலைவர்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு, மணிப்பூரில் இருதரப்புக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையால், சுமார் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில், ஏராளமானோர் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்பு..!

Security forces have reportedly prevented more than 100 internally displaced people from returning to their homes in Manipur state.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க