Vijay : 'உயிரின் மதிப்பு தெரியுமா... மன்னராட்சிக்கு புரியுமா?' - கோஷம் போடப்போக...
மண்ணூரில் குருபூா்ணிமா விழா
ஸ்ரீ பெரும்புதூா் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சாா்பில் குரு பூா்ணிமா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி குருதேவா் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்தில் பக்தா்களால் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதனைத் தொடா்ந்து நிரஞ்ஜனானந்தா தியானத்தை வழி நடத்தினாா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி சுத்தானந்த கிரி குருவின் மகத்துவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். புஷ்பாஞ்சலியுடன் விழா நிறைவு பெற்றது.