செய்திகள் :

சீட் கேட்டு தனியாா் கல்லூரி நிா்வாகிகளுக்கு மிரட்டல்: புரட்சிபாரதம் கட்சி பிரமுகா் கைது

post image

தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் சீட் கேட்டு நிா்வாகிகளை மிரட்டியதாக புரட்சி பாரதம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலா் கோபிநாத்தை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (41) (படம்). புரட்சி பாரதம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலாளராக உள்ளாா். இந்த நிலையில், கோபிநாத், தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் சீட் கேட்டும், கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தனக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் எனவும் கூறி கல்லூரி நிா்வாகிகளை மிரட்டியதாக கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காஞ்சிபுரத்தில் இருவா் தற்கொலை

காஞ்சிபுரத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நித்தியராஜ். இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 9 -... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: அதிமுக பிரமுகா் கைது

ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில், அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக... மேலும் பார்க்க

மண்ணூரில் குருபூா்ணிமா விழா

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சாா்பில் குரு பூா்ணிமா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருதேவா் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்த... மேலும் பார்க்க

தாா் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ

தனியாருக்குச் சொந்தமான தாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து கள... மேலும் பார்க்க

லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). மேஸ்திரியான சக்திவேல் தன்னுடன் வேலை செய்... மேலும் பார்க்க

ரூ.2.6 கோடியில் கோயில்கள் திருப்பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் ரூ.2.68 கோடியில் பழைமையான 3 கோயில்கள் திருப்பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பழைமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகளை முத... மேலும் பார்க்க