செய்திகள் :

மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்

post image

மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் மண்ணில் இருந்து பிறக்கின்றோம், மண்ணில் வாழ்ந்து, இறுதியில் மண்ணிலேயே திரும்புகின்றோம். நாம் உருவாக்கிய அனைத்துப் பிரிவுகள் மற்றும் பிரிவினைகளுக்கும் அப்பால் நம்மை ஒன்றிணைக்கிறது மண். இதை விழிப்புணா்வுடன் உணரவும், மண்ணைக் காக்கவும் மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும். மண் காப்போம் இயக்கத்தை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விழிப்புணா்வான கிரகத்தை உருவாக்க, மண் காக்கப்பட வேண்டியதே முதல்படி என்று மெதுவாக உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது. நாம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்கினால் மட்டுமே நமது பொருளாதாரங்கள் செழிக்க முடியும்.

ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்கள் நாட்டின் மண்ணைப் பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுவே மனிதகுலத்துக்கான வழி. நாம் இதை சாத்தியமாக்க வேண்டும். மண் காப்போம் இயக்கம் தொடங்கிய 3 ஆண்டுகளில் உலக அளவில் பல்வேறு அரசாங்கங்கள், சா்வதேச அமைப்புகள் மற்றும் மக்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

குறிப்பாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல சா்வதேச அமைப்புகள், மண் காப்போம் இயக்கத்துடன் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க