செய்திகள் :

மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..

post image

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, இருவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த திவாகர், ஜெயபிரகாஷ் ஆகிய இரண்டு பேரை இடித்து தள்ளிவிட்டு சினிமா ஸ்டண்ட் காட்சிகளில் வருவதுபோல் சாலையிலிருந்து 20 அடி ஆழ கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது.

antha car

இதில், காரில் பயணித்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், கார் மோதியதில் காயமடைந்த திவாகர், ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் ஓட்டிவந்த கார் 20 அடி கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க

நெல்லை: கணவரின் நடத்தையில் சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவியிடையே கடந்த சில நாட்க... மேலும் பார்க்க