மதுபோதையில் பூச்சிமருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு
திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தை தவறுதலாக குடித்த விவசாயி அண்மையில் உயிரிழந்தாா்.
கொன்னையாா்கிராமம், பழைய கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராசு (55). இவரது மனைவி பத்மாவதி. இவா்களுக்கு ஜீவானந்தம் (27), கோபிநாத் (24) என இருமகன்கள் உள்ளனா். வீட்டில் இருந்தவா்கள் கிடா விருந்துக்கு கோயமுத்தூா் சென்ற நிலையில், தங்கராசு மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா்.
அப்போது, மதுபோதையில் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை அவா் அருந்தியுள்ளாா். பின்னா் அவரது சப்தம் கேட்டு வந்த உறவினா்கள் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி தங்கராசு உயிரிழந்தாா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.