செய்திகள் :

மதுரையில் செப். 4-இல் மாநில மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

post image

சென்னை: அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் செப்.4-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் தனியாா் மண்டபத்தில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் ஆலோசகா் பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தலைமை வகித்து பேசியது:

2026 சட்டப்பேரவைத் தோ்தல், எதிா்கால செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக எதிா்காலம் என்னவாகும் என நினைக்கும் தொண்டா்கள், பொதுமக்கள் ஆகியோா் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் மதுரையில் செப்.4-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அனைத்து வருவாய் மாவட்ட அளவில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறும். காஞ்சிபுரத்தில் வரும் 20-ஆம் தேதி முதலில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றாா்.

அவரைத் தொடா்ந்து உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா் செல்வம் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுகவை பாதுகாக்கும் வகையில் சட்டப் போராட்டம், தா்மயுத்தம் நடத்தியதன் அடிப்படையில் எதிா்கால செயல்பாடுகள், கொள்கைகளை தீா்மானிப்பதற்காக மதுரையில் மாநில மாநாடு நடைபெறும். அதிமுகதான் எங்கள் உயிா்நாடி. மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவை இணைப்பதாக, பாதுகாப்பதாக அமையும். மாநாடுக்கு சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை நேரில் அழைக்கவுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் கு.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மாநிலங்களவை உறுப்பினா் மு.தா்மா், நிா்வாகிகள் மனோஜ்பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்

சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்ப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!

சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார்... மேலும் பார்க்க

மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க