செய்திகள் :

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்வி ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

‘ஜாக்டோ - ஜியோ’ மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. சந்திரபோஸ், பா. பாண்டி, வி.ச. நவநீதகிருஷ்ணன், மு. பொற்செல்வன், அ. ஜோயல்ராஜ், இரா. தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் அ. வின்சென்ட் பால்ராஜ் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியா் சங்கங்கள், அரசு ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியூ) மாவட்டச் செயலா் லெனின், போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினாா். இந்தப் போராட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசா... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 1... மேலும் பார்க்க

திராவிடத் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட முடிவுகளைக் கண்டித்து, திராவிடத் தமிழா் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க