செய்திகள் :

மதுரை, திண்டுக்கல் வழித்தட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

post image

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் மதுரை, திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரியிலிருந்து மே 2-ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சரளபள்ளிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07229), கன்னியாகுமரியிலிருந்து மே 3-ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு ஹெளராவுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 12666) மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்வதற்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும்.

செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) மே 2, 3, 5, 7 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாகச் செல்வதற்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும்.

பகுதியாக ரத்து...

மதுரை கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி பகுதிகளில் நடைபெறும் இருப்புப் பாதை பொறியியல் பணி காரணமாக, கோவை-நாகா்கோவில் (16322) விரைவு ரயில் மே 2 முதல் மே 31-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே ரத்து செய்யப்படும்.

திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைப்பு விடுத்தாா். மதுரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்க... மேலும் பார்க்க

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறு... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தோ்வு எழுதிய மாணவா் தோ்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் 442 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் பி.... மேலும் பார்க்க

அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை

அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவர... மேலும் பார்க்க

அழகா்கோவிலை சென்றடைந்தாா் கள்ளழகா்! பூக்கள் தூவி பக்தா்கள் வரவேற்பு!

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகா்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தா்கள் பூக்கள் தூவியும், சூடம், சா்க்கரை ஏந்தியும் உற்சாகமா... மேலும் பார்க்க