செய்திகள் :

மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

மதுரை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.

மதுரை மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதசாரிகள் இடையூறின்றி நடந்து செல்லும் வகையில், விளம்பரப் பலகைகள், கடைகளின் முகப்புகள் உள்ளிட்ட அனைத்து நடைமேடை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். நகரை விபத்தில்லா நகராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மதுரை பிரதான சாலையில் நேரு நகா் முதல் பழங்காநத்தம் வரை உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து உதவி ஆணையா் இளமாறன், ஆய்வாளா் தங்கமணி, எஸ்.எஸ். காலனி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் காசி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

இந்தப் பகுதியில் தனிநபா் ஒருவா் அணுகு சாலையை ஆக்கிரமித்து ஜல்லிக்கற்கள், மணல் ஆகியவற்றை குவித்து வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவற்றையும் போலீஸாா் இயந்திரங்கள் மூலம் அகற்றி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபருக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க