செய்திகள் :

மதுரை மாநகராட்சி: வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு; மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது புகார்

post image

மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கைது செயப்பட்டவர்கள்

இதன் பின்னணியில் மாநகராட்சியின் உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள், புரோக்கர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரபரப்பை ஏற்படுத்தி வரும் இச்சம்பவம் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். "மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வார்டுகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியார் கட்டடங்கள் உள்ளன. ஏரியாவுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு கட்டடங்களுக்கும் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. வரியை குறைக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகம் அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு குறைக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் கடந்த சில ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருந்தது மாநகராட்சி ஆணையாளரின் விசாரணையில் கடந்த ஆண்டு தெரிய வந்தது.

அனத்து வரி விதிப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் நிலையில் வரிவிதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஆணையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் முறைகேடுகளை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார் முறைகேடுகள் நடைபெற்ற மண்டல அலுவலகங்களில் சமீப நாள்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி 3 ஆவது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மண்டலத் தலைவர்கள், வரிவிதிப்பு குழுவினர், கவுன்சிலர்களின் வற்புறுத்தல் காரணமாகவே முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சில மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்களை விசாரிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Cyber ​​crime: ``டிஜிட்டல் கைது'' - 70 வயது மருத்துவரை மிரட்டி ரூ.3 கோடி பறித்த கும்பல்

இணையத்தள குற்றவாளிகள் நாடு முழுவதும் தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அதோடு பணமோசடி புகாரை காரணம் காட்டி டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்த... மேலும் பார்க்க

"வைரங்கள், ரூ.10 லட்சம்.." - ஒரு தொலைபேசி அழைப்பில் சிதைந்துபோன பெண்ணின் வாழ்க்கை!

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் பகுதியில் ஆஷா பணியாளராக புஷ்பலதா என்ற பெண் பணியாற்றி வந்திருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளை நிர்வகித்தும் கணவரை ஆதரித்தும் வந்துள்ளார் புஷ்பலதா. சிறு சிறு வேலைகளை செய்து ... மேலும் பார்க்க

Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி - கோவையை அதிர வைத்த காதல் தம்பதி

கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். தொடர... மேலும் பார்க்க

`ஸ்மார்ட் சிட்டி' பெயரில் 70,000 பேரிடம் ரூ..2700 கோடி வசூல்; அதிர வைத்த மெகா மோசடி..

`வீடு, நிலம், அதிக வட்டி..' ஆசையை தூண்டி மோசடிராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் சுபாஷ், ரன்வீர் சொந்தமாக நெக்சா எவர்கிரீன் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வந்தனர். இதில் தங்களது நிறு... மேலும் பார்க்க

``தீபாவளி சீட்டு, ரூ.2 கோடிக்கு மேல் மோசடி'' - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. நடந்தது என்ன?

புதுக்கோட்டை மச்சுவாடி, கொட்டையக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அந்த பகுதி மற்றும் காமராஜபுரம் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் தீபாவளி பண்டு சீட்டு பிடிப்பதாக ... மேலும் பார்க்க

`பெண்களுக்கு மாதம் ரூ.1500; சட்டவிரோதமாக வாங்கிய 2200 அரசு ஊழியர்கள்' -மகாராஷ்டிரா அரசு சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில அரசு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் `லட்கி பெஹின் யோஜனா' என்ற திட்டத்தை அறிவித்தது. தேர்தல் நேரம் என்பதால் இத்திட்டத்தி... மேலும் பார்க்க