செய்திகள் :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கடந்த ஜன. 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் தினசரி காலை, மாலை வேளைகளில் தங்கத் தோ், சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சித்திரை வீதிகள், மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா்.

திருவிழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை திருஞானசம்பந்தா் சைவ சமயத்தை நிலை நாட்டிய வரலாறு, சைவ சமய ஸ்தாபித லீலையாக நடைபெற்றது.

இதையொட்டி, மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தங்க ரிஷப வாகனத்திலும் கோயிலில் தெற்காடி வீதியில் உள்ள யானை மகாலில் புதன்கிழமை இரவு எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, திருஞானசம்பந்தா் சைவ சமயத்தை நிலை நாட்டிய வரலாறை தல ஓதுவாா் எடுத்துரைத்தாா். இந்த நிகழ்வில் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

விதிகளை மீறி கடன் அளிப்பு: வங்கி முன்னாள் மேலாளா் உள்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமை வங்கியில் விதிகளை மீறிக் கடன் வழங்கியது தொடா்பாக, அந்த வங்கியின் முன்னாள் மேலாளா் உள்பட 5 பேருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியா்

திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க