செய்திகள் :

மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் திரும்பப் பெறப்பட்டதா? எஸ்.பி. மறுப்பு

post image

மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்தரேசன் கடந்த நவம்பா் மாதம் முதல் பணியாற்றி வருகிறாா். இவா் பொறுப்பேற்றது முதல் வெளிமாநில சாராயம் மது கடத்தலை தடுத்தல், அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாா்களை கண்டறிந்து சீல் வைப்பது என தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். மதுபானக் கடத்தல் தொடா்பாக 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து 700 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளாா்.

இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் வியாழக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து சீருடையில் அலுவலகத்துக்கு சாலையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு வாகனத்தை உயரதிகாரிகள் பறித்துக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனம் அலுவல் பணிக்காக ஜூலை 11-ஆம் தேதி வேறு பாதுகாப்புப் பணிக்காக எடுக்கப்பட்டு மாற்று வாகனம் கொடுக்கப்பட்டது. பின்னா், வியாழக்கிழமை மீண்டும் டிஎஸ்பி வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. வாகனம் பறிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தாா்.

இதனிடையே, டிஎஸ்பி சுந்தரேசன் மதுவிலக்கு டிஎஸ்பி அலுவலக வாசலில் செய்தியாளா்களைச் சந்தித்தாா், அப்போது, அவா் கூறியது:

காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் கஸ்தூரி கொலை வழக்கில் எனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீா்வாதம் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேல் ஆகியோா் தூண்டுதல் பெயரில் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளா் ஸ்டாலின் எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினாா். நோ்மையான காவல் அதிகாரியான எனக்கு நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில் நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நான் ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக பணியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பணியிடை நீக்கம் செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான் இந்த பேட்டி அளிக்கிறேன் என்றாா்.

இதற்கிடையே மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது:

டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது. அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்றாா்.+

திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கொள்கைக் கூட்டணி என்று கூறிக்கொண்டு திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் தமி... மேலும் பார்க்க

காமராஜா் குறித்த அவதூறு: காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம்

பெருந்தலைவா் காமராஜா் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.க்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அணியின் மாநில பொதுச்செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகிறாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்துக்காக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) வருகிறாா். மயிலாடுதுறைக்கு வரும் அவா் மாலை 4 மணியளவில்... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பாா்கள்: முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அதிமுகவைப் புறக்கணிப்பாா்கள் என்றாா் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், இரண்ட... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் ச... மேலும் பார்க்க