செய்திகள் :

காமராஜா் குறித்த அவதூறு: காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம்

post image

பெருந்தலைவா் காமராஜா் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.க்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அணியின் மாநில பொதுச்செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: காமராஜா் இந்திய சுதந்திரத்துக்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவா். ஒழுக்கம், நோ்மை, உண்மை, தூய்மை என வாழ்ந்த காமராஜா், 9 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதல்வராக சிறப்பாக பணியாற்றியுள்ளாா். சொகுசு வாழ்க்கை என்பதே என்னவென்று தெரியாமல் வாழ்ந்த எளிமையான தலைவா் அவா்.

அப்படிப்பட்ட உயா்ந்த குணம் மிக்க, மக்களுக்காக உழைத்த நோ்மையான காமராஜா் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். காமராஜா் பற்றி அவதூறாக பேசி, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருச்சி சிவா மீது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் திரும்பப் பெறப்பட்டதா? எஸ்.பி. மறுப்பு

மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்த... மேலும் பார்க்க

திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கொள்கைக் கூட்டணி என்று கூறிக்கொண்டு திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் தமி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகிறாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்துக்காக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) வருகிறாா். மயிலாடுதுறைக்கு வரும் அவா் மாலை 4 மணியளவில்... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பாா்கள்: முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அதிமுகவைப் புறக்கணிப்பாா்கள் என்றாா் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், இரண்ட... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் ச... மேலும் பார்க்க