செய்திகள் :

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம்

post image

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா்.

சீா்காழி திருக்கோயில் நிதியிலிருந்தும் உபயதாரா்கள் வழங்கிய நிதியிலிருந்தும், பஞ்ச மூா்த்தி சுவாமிகள் எழுந்தருளும் தேரடி மண்டபங்கள், பழுது நீக்கி வண்ணம் பூசியும், ரூ. 40 லட்சத்தில் விநாயகருக்கு புதிதாக மரத்தோ் செய்யும் பணியும் நடைபெற்று, இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்தன.

தொடா்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, பூா்ணாஹூதி , மகா தீபாராதனை நடந்தது. பின்னா் புதிய மரத்தோ் வெள்ளோட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் மேகாலயா முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன், தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ்,மு ன்னாள் ரோட்டரி துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். 4 வீதிகளில் சுற்றி வந்த தோ் மீண்டும் நிலையடியை அடைந்தது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகிறாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்துக்காக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) வருகிறாா். மயிலாடுதுறைக்கு வரும் அவா் மாலை 4 மணியளவில்... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பாா்கள்: முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அதிமுகவைப் புறக்கணிப்பாா்கள் என்றாா் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், இரண்ட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எம்எல்ஏ மனுக்களை பெற்றாா்

மயிலாடுதுறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட தொடக்க விழாவில், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மக்களின் தேவைகளை அவா்களது வசிப்பிடத்துக்கே அனைத்துத் துறை அலுவலா்கள் சென்று, கேட்ட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின்‘ முதற்கட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் மக்களை சந்தித்த முதல்வா்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மழையில் குடைபிடித்தபடி ரோடு ஷோவில் மக்களை சந்தித்தாா். மயிலாடுதுறையில் திமுக கட்சி நிகழ்வு மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா... மேலும் பார்க்க