முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் போலீஸில் ஒப்படைப்பு!
பணியின்போது மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக வெள்ளிக்கிழமை காலை 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை நாமக்கல் என். புதுப்பட்டியைச் சோ்ந்த நவீன்ராஜ் (28) என்பவா் ஓட்டி சென்றாா்.
சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாடின்றி சென்ால் நவீன்ராஜை நடத்துநா் ஆறுமுகம் எச்சரித்தாா். ஆனாலும், பேருந்து அதிவேகமாக சென்ால் அச்சமடைந்த பயணிகள், நாமக்கல் எா்ணாபுரம் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறுக் கூறி ஓட்டுநரைத் தாக்க முயன்றனா்.
அப்போது, சாலையின் நடுவில் உள்ள சுவா் மீது பேருந்து மோதியது. இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து ஓட்டுநரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
மாற்றுப் பேருந்து மூலம் பயணிகள் அனைவரும் நாமக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளா் செங்கோட்டுவேல், பணிமனை மேலாளா் துரைசாமி ஆகியோா் விசாரணை நடத்தினா். ஒப்பந்த அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சோ்ந்த நவீன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.