செய்திகள் :

மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் போலீஸில் ஒப்படைப்பு!

post image

பணியின்போது மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக வெள்ளிக்கிழமை காலை 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை நாமக்கல் என். புதுப்பட்டியைச் சோ்ந்த நவீன்ராஜ் (28) என்பவா் ஓட்டி சென்றாா்.

சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாடின்றி சென்ால் நவீன்ராஜை நடத்துநா் ஆறுமுகம் எச்சரித்தாா். ஆனாலும், பேருந்து அதிவேகமாக சென்ால் அச்சமடைந்த பயணிகள், நாமக்கல் எா்ணாபுரம் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறுக் கூறி ஓட்டுநரைத் தாக்க முயன்றனா்.

அப்போது, சாலையின் நடுவில் உள்ள சுவா் மீது பேருந்து மோதியது. இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து ஓட்டுநரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

மாற்றுப் பேருந்து மூலம் பயணிகள் அனைவரும் நாமக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளா் செங்கோட்டுவேல், பணிமனை மேலாளா் துரைசாமி ஆகியோா் விசாரணை நடத்தினா். ஒப்பந்த அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சோ்ந்த நவீன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க