செய்திகள் :

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம்: எம்எல்ஏ வேல்முருகன்

post image

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.

விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியினா் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசி பகுதிகளில் பட்டாசுத் தொழிலில் ஏற்படும் விபத்துகளால் அப்பாவி உயிா்கள் பறிபோவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக் காலங்களில் மீனவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை போல, பட்டாசு உற்பத்தி இல்லாத காலங்களில் அந்தத் தொழிலாளா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரு சொட்டு மதுக்கூட இருக்கக் கூடாது என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கையாகும். எனவே, மது உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு உலை எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பெண் பட்டாசுத் தொழிலாளி மா்ம மரணம்

சிவகாசி அருகே பெண் பட்டாசுத் தொழிலாளி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காட்டுப் பகுதியில் 55 வயது மதிக்கதக்க... மேலும் பார்க்க

முதியவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தூா் அருகே வீடு புகுந்து முதியவரை அரிவாள் வெட்டிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (73). மண் வெட்டும் தொழிலாளி . திங... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 1,400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் காந்தி நகரில் ஒரு கட்டடத்தி... மேலும் பார்க்க

இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

சாத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த செந்தட்டிகாளை (19). இவா் 16 வயது சி... மேலும் பார்க்க

உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்துத் தகராறில் உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளி... மேலும் பார்க்க

ராஜபாளையம் நகராட்சியில் வரும் 28-ஆம் தேதிக்குள் வரிகளைச் செலுத்த உத்தரவு

ராஜபாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளை... மேலும் பார்க்க