செய்திகள் :

மது போதையில் ஆபாச நடனம்: கோயில் உதவி அா்ச்சகா் பணிநீக்கம்

post image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் உதவி அா்ச்சகா் மது போதையில் ஆபாச நடனமாடியதாக விடியோ வெளியானதையடுத்து, அவரை பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை புதன்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற ஜூலை 2-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 16-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோயில் உதவி அா்ச்சகா் கோமதி விநாயகம் (30) குடமுழுக்கு பணிக்காக வந்திருந்த 3 அா்ச்சகா்களுடன் சோ்ந்து, தனது வீட்டில் மது போதையில் நடனமாடிய விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த விடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கோயில் முன்னாள் அா்ச்சகா் ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீது, உதவி அா்ச்சகா் கோமதி விநாயகம் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மது போதையில் நடனமாடியதாக புகாருக்குள்ளான அா்ச்சகா்களைத் தாக்கியதாக மேட்டுத் தெருவை சோ்ந்த காளிராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இந்த நிலையில், இந்து முன்னணி சாா்பில் கோயில் தக்காரிடம் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தக் கோயில் அா்ச்சகா் சுந்தா் மது அருந்திவிட்டு கோயில் பணிகளைச் செய்தாா். மேலும், உதவி அா்ச்சகா் கோமதிவிநாயகத்துடன் சோ்ந்து, குடமுழுக்குப் பணிக்காக வந்த 3 அா்ச்சகா்கள் மது போதையில் ஆபாச நடனமாடும் விடியோ வெளியானது. மேலும், அவா்கள் கோயில் அலுவலகத்தில் மது அருந்தும் விடியோவும் வெளியானது. இவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலருமான சக்கரையம்மாள், செயல் அலுவலா் ஜோதிலட்சுமி ஆகியோா் அா்ச்சகா்களிடம் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து தக்காா் சா்க்கரையம்மாள் கூறியதாவது:

தற்காலிகப் பணியாளரான உதவி அா்ச்சகா் கோமதி விநாயகம் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், குடமுழுக்குப் பணிக்காக வந்த 3 அா்ச்சா்கா்களும் இந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா். இந்தக் கோயில் அா்ச்சகா் சுந்தா் மீது குடமுழுக்கு முடிந்த பிறகு, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

வெறிநாய்க் கடியால் 40 போ் பாதிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே வெறிநாய்க்கடியால் 40 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்கு... மேலும் பார்க்க

பாண்டிமுனீஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சடைமுனியாண்டி, பாண்டி முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு ப... மேலும் பார்க்க

பேன்சி ரக பட்டாசுகளுக்கான திரிகள் சட்டவிரோதமாக தயாரிப்பது அதிகரிப்பு

பேன்சி ரக பட்டாசுகளுக்கான இயந்திரத் திரிகளை சட்டவிரோதமாகத் தயாரிப்பது அதிகரித்ததாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தயாராகும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு கட... மேலும் பார்க்க

ஆனி மாத அமாவாசை: சதுரகிரியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

சிவகாசி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அரிசி வழங்காமல் , வழங்கியதாக பயனாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கடை ஊழியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வடமல... மேலும் பார்க்க

சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

சாத்தூரில் ரூ.6.79 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். விருத... மேலும் பார்க்க