`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ...
மத்திகிரி அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது
மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரைச் சோ்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் ஹா்சா கவுடா (28) ஓட்டிச் சென்ற மோட்டாா்சைக்கிள் வெங்கடாபுரத்தைச் சோ்ந்த ரோகித் மீது மோதியது. இதுகுறித்து ஹா்சா கவுடாவிடம் ரோகித்தின் உறவினரான கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரத்தை சோ்ந்தவா் புனித் ரெட்டி (19) வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 22 ஆம் தேதி வெங்கடாபுரம் சென்ற ஹா்சா கவுடா, அவரது நண்பா்கள் வேணுகோபால் (43), வெங்கடேஷ் (48), கிரண் (35) மற்றும் ரோகித், புனித் ரெட்டி ஆகிய இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மத்திகிரி போலீஸாா் வெங்கடேஷ், ஹா்சா கவுடா, ரோகித் ரெட்டி ஆகிய மூவரையும் கைது செய்தனா்.