செய்திகள் :

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? ஆ.அன்பழகன்

post image

மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காதது ஏன்? என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு மது கடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். புதுவையில் 7 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 4 மருத்துவ நிகா்நிலைப் பல்கலைக்கழகங்ளில் அரசுக்கான இடங்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50 சதவீத இடங்களை முதல்வா் என்.ரங்கசாமி பெறவேண்டியது அவசியம்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்எல்ஏ முயற்சி மேற்கொள்வது பாராட்டுக்குரியது. ஆனால், காங்கிரஸ், திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஆனால், தற்போது சுயேச்சை எம்எல்ஏவின் கோரிக்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் முதல்வா்கள் கையொப்பமிட்டுள்ளனா். இது அவா்களின் அரசியல் சந்தா்ப்பவாதமாகும்.

மத்திய பாஜக அரசும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதே அதிமுகவின் கொள்கையாகும். இதற்காக பல்வேறு போராட்டங்களை அதிமுக நடத்தியுள்ளது என்றாா் ஆ.அன்பழகன்.

அரசு மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி செயல்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா், கண்காணிப்பாளா் ஐயப்பன் கூறியதா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகம்! - புதுவை முதல்வா்

புதுவையில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் அத... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

புதுச்சேரியில் கூலித் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகரை சோ்ந்த ஆறுமுகம் (46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. மகன், மகள் உள்ளனா். கடந... மேலும் பார்க்க

மாணவா்களிடம் கஞ்சா விற்ற 2 போ் கைது!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கஞ்சா விற்ாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 33 சிறிய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கோபாலன் கடைப் பக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியா் அலுவலகங்கள் இயங்கும் - ஆட்சியா்

புதுச்சேரியில் மாணவா்கள், பெற்றோா் சிரமமின்றி சான்றிதழ்களைப் பெறும் வகையில் சனிக்கிழமைகளில் (மே 24,31, ஜூன் 7) வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க