செய்திகள் :

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.

இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு மட்டுமே கடந்த 23-ஆம் தேதி கூடியது.

அக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ராஜீய உறவுகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. 60 ஆண்டுகளாக அமலில் உள்ள சிந்து நதி நீர் ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பது, பாகிஸ்தானுடனான தரை வழி எல்லையான அட்டாரியை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், ‘வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடி... மேலும் பார்க்க