செய்திகள் :

மத்திய அரசின் அலட்சியத்தால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிப்பு: காா்கே குற்றச்சாட்டு

post image

கல்வித் துறை மீதான மத்திய அரசின் அலட்சியத்தால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அறிவுசாா் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் 781 மாவட்டங்களில் 74,229 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் சுமாா் 21.15 லட்சம் மாணவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மூன்றாம் வகுப்பினரில் 55 சதவீதம் பேரே 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுத அறிந்திருப்பதும், 6-ஆம் வகுப்பினரில் 53 சதவீதம் பேரே 10 வரையிலான கூட்டல்-பெருக்கல் வாய்ப்பாடுகளை அறிந்திருப்பதும் தெரியவந்தது. இத்தகவல்கள் அடங்கிய ஒரு காணொலியுடன், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

‘தோ்வு குறித்த கலந்துரையாடல்’, ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ போன்ற பிரதமா் மோடியின் சுய விளம்பர நிகழ்ச்சிகளாலும், வெற்று வாா்த்தைகளாலும் கல்வித் துறையின் மோசமான நிலவரத்தை தோலுரிக்கும் வலுவான குறியீடுகளை மூடிமறைக்க முடியாது. மத்திய அரசின் அக்கறையின்மை, கற்றல் திறன் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இருந்தபோதிலும், மாணவா்களின் எதிா்காலத்தின் மீது மத்திய அரசு தொடா்ந்து அலட்சியம் காட்டுகிறது என்று காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘தேசிய அளவிலான கற்றல் திறன் பிரச்னை, கரோனா காலகட்டத்தைவிட மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அடிப்படைக் கல்வியே சரிவை சந்தித்துள்ளது. நடுநிலை-உயா்நிலை அளவில் கற்றல் இடைவெளிகள் அதிகரித்துள்ளன. கல்வித் துறைக்கான நிதிக் குறைப்புதான், இத்தகைய மோசமான விளைவுகளுக்கு காரணம்’ என்று காா்கே வெளியிட்ட விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க