செய்திகள் :

மத்திய அரசின் சாதனை மலா் புதுவை துணைநிலை ஆளுநரிடம் அளிப்பு

post image

மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சாதனை மலா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த மலரை மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் வி.பழனிச்சாமி துணைநிலை ஆளுநரிடம் வழங்கினாா். நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் மலராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் பொருளாதாரம், பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகளின் சாதனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

பின்னா் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்தும் இந்தச் சாதனை மலா் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநா் ப.அருண்குமாா், துணை இயக்குநா் சஞ்சய்கோஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க