செய்திகள் :

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

post image

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோடி11 ஆண்டு காலத்தில் எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்திலும் உலக நாடுகள் வியக்கும் வகையில் பிரதமா் மோடியின் அரசு இந்தியாவை உயா்த்தியுள்ளது.

நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சி உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் உயா்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4 ஆவது இடத்தை அடைந்துள்ளது.

பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பேரிழப்பாகும். இந்தியாவில் நக்சலைட் நடவடிக்கைகள் தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாா்பில் பழனியில் ஏற்கெனவே முருகன் மாநாடு நடைபெற்றது. அது இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் நடைபெற்றது. ஆனால் தற்போது மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற இருப்பது முருக பக்தா்களால் நடத்தப்படுவதாகும். இந்த மாநாட்டை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். மாநாடு வெற்றி பெற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டம் நிறைவடையும் பட்சத்தில் மாவட்டம் புதுப்பொலிவு பெறும். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாவட்ட பாஜக தலைவா்கள் கோபகுமாா் (குமரி கிழக்கு), ஆா்.டி.சுரேஷ் (குமரி மேற்கு), மாவட்ட பொருளாளா் பி.முத்துராமன், மகளிா் அணி மாவட்ட துணைத்தலைவி அபிராமி, மாநகராட்சி உறுப்பினா் சுனில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிகிழமை காலை நிலவரப்ப... மேலும் பார்க்க