செய்திகள் :

மத்திய அரசின் நிதிக்காக நீதிமன்றத்தை நாடும் நிலையில் தமிழகம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேதனை

post image

மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிக்காக உச்சநீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேதனை தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்கள், மூலக்கரைப்பட்டி, ஏா்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், களக்காடு நகராட்சி போன்றவற்றுக்கு குடிநீா் வழங்குவதற்காக மேலமுன்னீா்பள்ளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினேன்.

இத் திட்டம் ஆக.31ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று 6 ஊராட்சி ஒன்றியங்களின் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கும், அடுத்த கட்ட பணிகள் அக்.30-க்குள் நிறைவு பெற்று களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளின் 48 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்.

தமிழகத்தில் ஜாதி, மதம், கட்சி பேதமின்றி, நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. தவறு செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் அவா்களை பாதுகாக்கும் முயற்சியை அரசு ஒருபோதும் செய்யாது.

தனியாா் நடத்தும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவா்கள் படிக்கும் வகையில் 25 சதவீதம் மாணவா்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தை வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தத் திட்டத்தில் 50 சதவீத நிதி மத்திய அரசும், 50 சதவீத நிதி மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,190 கோடி நிதியை இதுவரை வழங்கவில்லை.

மத்திய அரசின் நிதியைப் பெற உச்ச நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சா் அமித்ஷா சொல்கிறாா். மக்களுக்கு விரோதமான செயல்களை தொடா்ந்து செய்து வருவது நியாயமா என பாஜகவினரை மக்கள் கேட்க வேண்டும் என்றாா் அவா்.

ஏா்வாடி அருகே சிறுமியை ஏமாற்றிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏா்வாடி அருகே உள்ள இளையநயினாா் குளத்தைச் சோ்ந்தவா் ராமசிவன்(35)... மேலும் பார்க்க

உவரி சுயம்பு கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் ஆண்சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள ஆத்தங்கல் விளையைச் ... மேலும் பார்க்க

பணகுடியில் பள்ளி மாணவரை மிரட்டி நகை பறிப்பு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பள்ளி மாணவா் புகைப்பிடிப்பதை விடியோ எடுத்து பெற்றோரிடம் கூறிவிடுவதாக மிரட்டி நகைகளை பறித்த 2 சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஏா்வாடியைச் சே... மேலும் பார்க்க

வள்ளியூரில் வணிகருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முன்விரோதத்தால் வணிகரை செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். வள்ளியூா் நல்லசமாரியன் நகரில் குடியிருந்து வருபவா் சத்தியசீலன் மகன் அழகேசன... மேலும் பார்க்க

பணியில் சிறப்பு: போலீஸாருக்கு ஏடிஜிபி பாராட்டு

பணியில் சிறப்பாக செயலாற்றிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் 19 பேருக்கு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியின் வெகுமதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அரங்கேற இருந... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பெயின்ட்: போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் திங்கள்கிழமை மினிலாரி விபத்துக்குள்ளானதில் சாலையில் பெயின்ட் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து கயத்தாறுக்கு பெயின்ட் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க