செய்திகள் :

'மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்...' - மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா

post image

கலவரம், இன்டர்நெட் தடை, லாக்டவுன் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக, மணிப்பூரின் அன்றாடம் ஆகிவிட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் ஆட்சியில் இருப்பது பாஜக அரசு. 'கலவரங்கள் குறித்து பெரிதாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை' என்று மணிப்பூரின் முதலமைச்சர் பைரன் சிங்கின் மீது மக்களும், எதிர்க்கட்சிகளும் மாறி மாறி புகார்களை தொடுத்தாலும், பெரிதாக அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் வந்ததில்லை.

நேற்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் டெல்லிக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் கொடுத்துள்ளார்.

மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்

தனது ராஜினாமா குறித்து பைரன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். மத்திய அரசு தகுந்த நேரத்தில் எடுத்த முடிவுகள், செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஒவ்வொரு மணிப்பூர் மக்களையும் காக்கச் செய்த பணிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். மத்திய அரசின் இந்தப் பணி எப்போதும் தொடர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2022-ம் ஆண்டு தான், மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அடுத்த தேர்தல் வர இன்னமும் கிட்டதட்ட 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், 'வேறொருவர் முதலமைச்சர் பதவிக்கு வருவார்களா, ஜனாதிபதி ஆட்சி செயல்படுத்தப்படுமா அல்லது தேர்தல் நடத்தப்படுமா?' என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்... மேலும் பார்க்க

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க