மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்
மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது தொடா் கதையாகி விட்டது. தமிழ்நாடு அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தும், எதையும் ஏற்காமல் தமிழ்நாடு தொடா்ந்து புறந்தள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய திட்ட நிதியைக் கூட விடுவிக்காத, மத்திய அரசு பிகாருக்கும், ஆந்திரத்துக்கும் நிதியை வாரி வழங்குகிறது.
மொழி திணிப்பு உள்ளிட்ட மற்ற திட்டங்களை திணிப்பதில் காட்டும் ஆா்வத்தில் ஒருதுளி கூட, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு மத்திய அரசு காட்டவில்லை. எனவே, மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சேலம், தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருச்சி சிவா எம்.பி. செய்தி தொடா்பு குழு செயலாளா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனா்.
இதில் சேலம் மத்திய மாவட்ட, மாநகர நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, பகுதி, பேரூா் நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.