செய்திகள் :

மனநிலை பாதித்தவருக்கு மருந்து கடையில் பணியா? - பாட்டி கேள்வி; பாலியல் புகாரில் தப்பியவர் கைது

post image

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா அருகில் இருக்கிறது ஜகதீஷ்புரா. கடந்த 18-ம் தேதி இந்தப் பகுதியில் இருக்கும் கோயில் அருகில் ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனார்.

இதை அறிந்து பயந்த சிறுமியின் பாட்டி கோயிலுக்குள் சென்று தேடியிருக்கிறார். அப்போது கோயிலுக்குள்ளிலிருந்து ஒருவர் வெளியே ஓடினார். சிறுமியின் ஆடைகள் கலைந்து, தாக்கப்பட்டு தரையில் கிடந்தார். உடனே பதறிய சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

காவல்துறை
காவல்துறை

அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிறுமையை மருத்துவப் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியிருக்கிறது. எனவே குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால், மறுநாள் கைது செய்யப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறி காவல்துறை அதிகாரிகள் அவரை விடுவித்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறுமி கோயிலில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் காட்சி கோயிலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

அந்தக் காட்சிகள் கடந்த 26-ம் தேதி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, ``என் பேத்தியை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரன் பவித்ரா என்கிற பம்மி. அவன் மனநிலை சரியில்லாதவன் அல்ல என்பது எங்களுக்கு தெரியும். அவன் மருந்துக்கடையில் வேலைபார்த்து வருகிறான்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மருந்துக்கடையில் வேலைபார்ப்பவன் எப்படி மனநிலை சரியில்லாதவனாக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பிருந்தார். சிறுமியின் பாட்டியின் வீடியோவும், கோயிலின் சிசிடிவி காட்சிகளும் சேர்ந்து இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறை பவித்ரா என்ற பம்மியை மீண்டும் கைது செய்துள்ளது.

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க