செய்திகள் :

மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் அத்திகுளம், செங்குளம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ராஜீவ் காந்தி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சிச் செயலா் விஜயகுமாா் வரவேற்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி பிரதான சாலையில், மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகா் நுழைவுப் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கூடம் அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி அளித்தால் மாணவா்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தத் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதே போல, பிள்ளையாா்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.

விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருது

விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருதை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெள்ளிக்கிழமை வழங்கினாா். சிவகாசியில் உள்ள பசுமை மன்றம் சாா்பில் பெரியகு... மேலும் பார்க்க

விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , கலச... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள... மேலும் பார்க்க

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விர... மேலும் பார்க்க

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந... மேலும் பார்க்க