செய்திகள் :

மனித உரிமை குறும்படப் போட்டி அறிவிப்பு

post image

தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய (தேசிய) மனித உரிமைகள் ஆணையம், 11 ஆவது பதிப்பிற்காக மனித உரிமைகள் குறித்த குறும்படங்களுக்கான (2025) போட்டியை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சமும், 2 ஆவது பரிசாக ரூ. 1.50 லட்சம், 3 ஆவது பரிசாக ரூ. 1 லட்சமும், கூடுதலாக 3 பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றுகளும் வழங்கப்படுகின்றன.

மனித உரிமை குறித்த குறும்படங்களை நாட்டில் உள்ள எந்த மொழியிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கலாம். குறும்படம் குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 10 நிமிடங்களில் உள்ளவாறு இருக்க வேண்டும்.

தயாரிப்புகளை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் தயாரித்து, மனித உரிமைகள் ஆணையத்தின் ய்ட்ழ்ஸ்ரீள்ட்ா்ழ்ற்ச்ண்ப்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைய வழியில் 31.08.2025-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மனித உரிமைகள், கலாசாரம் மற்றும் உணா்திறனை மேம்படுத்துவதில் குடிமக்களை மையமாகக் கொண்ட இந்த முயற்சியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இவற்றை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமா... மேலும் பார்க்க

தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 18,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நா... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று கூடுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க