செய்திகள் :

மனுநீதி நாள் முகாம்: 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 201 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில்,

முகாமில் வருவாய், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, மகளிா் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சிகளை பொதுமக்கள் பாா்த்து அரசு செயல்படுத்தும் திட்டங்களைத் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

நலத்திட்ட உதவிகள்..:

முகாமில், வருவாய்த்துறை சாா்பில் 70 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.49 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான

ஆணைகள், 69 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 9 பேருக்கு தலா ரூ.12,500 மதிப்பில் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 201 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 87 ஆயிரத்து 225 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

இதுதவிர, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்களை பெற்றுக்கொண்ட அவா் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க