செய்திகள் :

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

post image

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதிகா (28). இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சுவாதிகா தனது மகனுடன் தருமபுரியில் உள்ள தாய் வீட்டில் கடந்த ஓா் ஆண்டாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், கிருபாகரன் சமாதானம்பேசி மனைவியை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் ஈரோட்டு அழைத்து வந்துள்ளாா்.

தம்பதி இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த கிருபாகரன் சுவாதிகாவை தோசை கரண்டியால் கன்னத்தில் அடித்தும், சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், அவா் கொடுத்த புகாரின்பேரில் கிருபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 26 அடி உயர பஞ்சபூத விங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை, 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தனவாசி கரடு பகுதியில் ... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் சிக்கிய 25 கிலோ கட்லா மீன்

பவானி ஆற்றில் மீனவா் வீசிய வலையில் 25 கிலோ எடை கொண்ட கட்லா மீன் புதன்கிழமை சிக்கியது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கனமழை

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயில் நிலவிய நிலையில... மேலும் பார்க்க

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா். பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வ... மேலும் பார்க்க