செய்திகள் :

மன்னராட்சியா? குடியரசு ஆட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

post image

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்ரிகுடிமாண்டப் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால், இரு தரப்பினரையும் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதியான நியூ பனேஷ்வரை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். கட்டுப்பாடுகளை மீறி செல்ல முயன்றதால், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளையும் காவல்துறையினர் பயன்படுத்தினர். இந்த தாக்குதலின்போது, ஆர்பாட்டக்காரர்களில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறினர்.

நேபாளத்தில் முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 17 ஆண்டுகளில் ஒரு பிரதமர்கூட 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

அரசியல் கூட்டணி குழப்பம், தேர்தல் அரசியல் காரணமாக 17 ஆண்டுகளில் 13 பிரதமர்களை நேபாளம் கண்டுவிட்டது.

இந்த நிலையில், தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால், மீண்டும் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். மேலும், மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வருமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க