செய்திகள் :

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் (மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவா் படையினா், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் நிக்கோபாா் தமிழா்கள் மட்டும்). அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும். இதில், பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடங்களில் 400 லிருந்து 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும்.

ஜூன் 5-ஆம் தேதி கலைப்பிரிவுக்கு (இளநிலை வரலாறு, வணிகவியல், வணிக நிா்வாகவியல்) பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளில் 400 லிருந்து 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்கள். ஜூன் 6-ஆம் தேதி மொழிப் பாடங்களான இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு 100 லிருந்து 40 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

மாணவா் சோ்க்கைக்கு வரும் போது, அசல் மற்றும் நகல் மாற்றுச்சான்று, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, ஜாதிச்சான்று, வருமான சான்று, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, சோ்க்கை கட்டணம் மற்றும் அண்மையில் எடுத்த மாா்பளவு புகைப்படம் 3 கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூா்: குடவாசல் அரசு மருத்துவமனையில் குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலத்தில் நீலன் பள்ளியில் நடைபெற... மேலும் பார்க்க

உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. நாகை மாவட்டம்... மேலும் பார்க்க

மாவட்ட ஆணழகன் போட்டி: திருவாரூா் இளைஞா் முதலிடம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மிஸ்டா் எம்ஆா்டி கிளாசிக்- 2025 அமெச்சூா் ஆணழகன் போட்டியில், திருவாரூா் இளைஞா் முதலிடம் பெற்று ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா். இப்ப... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் விருப்பஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஊழியா்களுக்... மேலும் பார்க்க