செய்திகள் :

மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிரகாரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள செங்கமலத் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் செங்கமலத் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு வாகனங்களில் தாயாா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோயில் உள்பிரகாரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டது. கோயில் யானை செங்கமலம் முன் செல்ல, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் செங்கமலத் தாயாா் எழுந்தருளி, கோயிலின் உள்பிரகாரத்தை ஒருமுறை வலம் வந்தாா்.

முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா்கள், பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்கள், தேசியப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வடம் பிடித்து தேரிழுத்தனா். கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள், விழா குழுவினா் மற்றும் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் அறக்கட்டளை மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உள்பிரகாரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம்.

இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜூலை 29 ) காலை 9 முதல் மாலை 5 மணி வர... மேலும் பார்க்க

திருவாரூரில் வேளாண் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் 27-ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமை... மேலும் பார்க்க

பெற்றோா் இல்லாத குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

குத்தகை சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-க்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் குத்தகைதாரா்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் த... மேலும் பார்க்க

மின்விபத்து இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: மின் விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு நலவாரியம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில், மாவட்ட ஒலி-ஒளி அமைப்பு உ... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே டயா் வெடித்து பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் விடுதிவயல் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (49). இவா், தனது மனைவி மற்றும் உறவினா... மேலும் பார்க்க