செய்திகள் :

மயிலாடுதுறையில் ஆக.31-இல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடத்த முடிவு

post image

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டை மயிலாடுதுறையில் ஆக.31, செப்.1ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றாா் அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் கே. சாமுவேல்ராஜ்.

மாநாட்டுக்கான வரவேற்பு குழு அமைப்பது குறித்து மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழ்நாட்டில் தற்போதும் மயானங்களில், மருத்துவமனையில், அரசு அலுவலகங்களில் சாதிய பாரபட்சம் நிலவுகிறது. இன்றைக்கும் கூட தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் பல ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்ற முடியாத நிலை உள்ளது. மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு நியாயமாக தலைமையாசிரியா் பொறுப்புக்கு வரவேண்டிய ஆசிரியருக்கு அந்த பணி சாதியின் காரணமாக வழங்கப்படாமல் உள்ளது. இந்த சாதிய பாகுபாட்டுக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாடு ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் நடைபெற உள்ளது. இதில், சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளா் எம்.ஏ. பேபி பங்கேற்கவுள்ளாா் என்றாா்.

அமைப்பின் மாவட்ட தலைவா் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளா் சி. மேகநாதன் வரவேற்றாா். சிறப்பு தலைவா் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. மகேந்திரன், மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, மாநில பொதுச் செயலாளா் கே. சாமுவேல்ராஜ், துணை பொதுச் செயலாளா் பி.சுகந்தி, மாநில செயலாளா் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுத... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

சீா்காழி புறவழிச்சாலை அருகே பனமங்கலம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை குப்பை கொட்டிய லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை அருகில் அமைந்துள்ள பனமங்கலம்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பண... மேலும் பார்க்க

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை... மேலும் பார்க்க