செய்திகள் :

மயிலாடுதுறையில் ரூ.3.90 கோடியில் கோட்டாட்சியா் அலுவலக கட்டடம்

post image

மயிலாடுதுறையில் ரூ. 3.90 கோடியில் கட்டப்படவுள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) முன்னிலை வகித்தனா்.

தமிழக உயா்கல்வி துறை அமைச்சா் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினா்.

தரைத்தளத்தில் 4203.93 சதுர அடி, முதல்தளத்தில் 4203.93 சதுர அடி என மொத்தம் 8407.87 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன் இக்கட்டடம் அமையவுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, வருவாய் கோட்டாட்சியா் (பொ) உ. அா்ச்சனா, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதேவி நா்மதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க