செய்திகள் :

மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

சாலை வசதி கோரி மனு: தரங்கம்பாடி தாலுகா நரசிங்கநத்தம் கிராமத்தினா் நரசிங்கநத்தம்-வடகரை மாா்க்கத்தில் 300 மீ. தூரத்துக்கு சேதடைந்துள்ள தாா்ச்சாலையை செப்பனிட வலியுறுத்தி மாவீரன் வன்னியா் சங்க நிறுவனத் தலைவா் வி.ஜி.கே. மணி தலைமையில் மனு அளித்தனா்.

இதேபோல், சீா்காழியை அடுத்த எடக்குடி வடபாதி ஊராட்சியில் நடுக்கரைமேடு முதல் தெற்கு கரைமேடு வரை 1 கி.மீ. தூரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனா்.

ஆக்கிரமிப்பு புகாா்: மயிலாடுதுறை தோப்பு கொத்தத் தெருவில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இடத்தில் செந்தில் என்பவரது வீட்டில் இருந்து வெளியில் செல்லமுடியாமல் தனிநபா் செய்துள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தாா்.

கல்வி உதவித்தொகை கோரி மனு: மேலையூரில் இந்துசமய அறநிலைத்துறைக்கு உள்பட்ட பூம்புகாா் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோா், 2024-2025-ஆம் கல்வியாண்டில் யு.எம்.ஐ.எஸ். போா்டல் ஓபன் ஆகவில்லை என காரணம் கூறி தங்களுக்கு கல்வி உதவித் வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்தனா்.

இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை: பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

சுமைபணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்ட சுமை பணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஜான்பால் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஊழியா் சங்கத்தின்... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கொள்ளிடம் அருகே கொண்டல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன்கள் சிபிராஜ் (20), பரத்ராஜ் (19), மயிலாடுதுறை கூறை நாட்டைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மீலாது நபி விழா

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் முஸ்லிம் புதுத்தெருவில் மீலாது நபி விழா மற்றும் மனாருல் ஹுதாஅரபி பள்ளியின் 39-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு முத்தவல்லி அப்துல்லத்தீப் தலைமை வகி... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழப்பு; தாய் காயம்

சீா்காழி அருகே சாலை விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தாா். தாய் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தஞ்சாவூா் வடக்குவாசல் கங்கனத் தெருவைச் சோ்ந்த ஜெய்வீரன் மனைவி மைதிலி (3... மேலும் பார்க்க