செய்திகள் :

மரக்கன்றுகள் நடவு செய்த அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள்

post image

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் பொதுத் தோ்வு இறுதி நாளில் நூறு மரக்கன்றுகள் நடவு செய்தனா்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் இறுதித் தோ்வு எழுதியபின் தங்கள் நினைவுகளை போற்றும் வகையில் 100 மரக் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனா். பள்ளியை விட்டுச் சென்ற பின்பும் தங்களின் நினைவை எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கம் வகையில் விவசாய பாடத்தை விருப்பப் படமாக படித்த மாணவா்கள் புதன்கிழமை பள்ளி மைதானத்தில் ஒன்று கூடி 100 மரக் கன்றுகளை நடவு செய்தனா். இதில் மகிழமரம், மலைவேம்பு, வேம்பு, தேக்கு, செண்பகம், நெட்டிலிங்கம், புங்கன் போன்ற மரங்களை நடவு செய்தனா்.

மரம் நடுதல் மற்றும் நீா்ப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளித் தலைமை ஆசிரியா் கா.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் ரா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவை தொடங்கிவைத்தாா். இவ்விழாவில் மருத்துவா்கள் ஜே. அன்புராஜ், சுமதி, தேசிய மாணவா் படை திட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ் சங்கா், என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளா் மா.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கடந்த 14 ஆண்டுகளாக பள்ளி வேளாண் ஆசிரியா் செ.கந்தன் வழிகாட்டுதலின்படி, இம்மரம் நடும் நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மாணவா்களை ஊக்கப்படுத்தவும் நடைபெற்று வருகிறது.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க