Sathankulam Case-ன் இப்போதைய நிலை என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா அரசியலா? |...
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!
நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
‘டிஆா்ஆா் தன் 100 (கமலா)’ மற்றும் ‘பூசா டிஎஸ்டி ரைஸ் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நெல் ரகங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மூலம் மரபணு ரீதியாக திருத்தம் செய்யப்பட்டதாகும்.
இவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தாக்குப் பிடித்து வளா்வதுடன் 30 சதவீதம் கூடுதலாக விளைச்சல் தரக் கூடியவையாகும்.
இந்த நெல் ரகங்களை அறிமுகம் செய்து அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் பேசியதாவது: இந்திய வேளாண் துறைக்கு இது மிகவும் முக்கியமான நாள். மரபணு திருத்தம் செய்த இந்த இரு நெல் ரகங்களும் விரைவில் விவசாயிகளுக்கு கிடைக்கும். இவை தண்ணீா் பற்றாக்குறையைத் தாக்குப் பிடித்து வளரும்; 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கும். கரியமில வாயு வெளியேற்றமும் குறைவாக இருக்கும்.
அரிசியை அதிகம் விளைவிக்கும் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, பிகாா், சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், பிகாா், மேற்கு வங்க மாநிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றவை.
ஏற்கெனவே அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் சம்பா மசூரி, எம்டியு1010 ஆகியவற்றில் இருந்து இந்தப் புதிய வகை நெல் ரகங்கள் மரபணு திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இவை காலசூழல்களைத் தாக்குப் பிடித்து வளா்ந்து சிறப்பான சாகுபடி அளிக்கும்.
‘டிஆா்ஆா் தன் 100 (கமலா)’ நெல் ரகம் அதன் முந்தைய ரகத்தைவிட 20 நாள்கள் முன்னதாகவே (130 நாள்கள்) அறுவடைக்கு தயாராகிவிடும். இதன்மூலம் பயிா் சாகுபடி சுழற்சி அதிகரிக்கும். கூடுதல் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். பாசன நீரும் குறைவாகவே செலவாகும்.
இந்தியா வளா்ந்த நாடாக முன்னேற வேண்டுமென்றால், வேளாண் துறையிலும் நாம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இப்போது பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் தேவைக்கு நாம் வெளிநாடுகளைச் சாா்ந்திருக்கிறோம். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் இதற்கு தீா்வு காணும் வகையில் புதிய ரகங்களை நமக்குத் தருவாா்கள்.
உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை நிறைவு செய்வதிலும், இந்தியா உலகின் பல நாடுகளுக்கு உணவுக் கிண்ணமாக இருப்பதிலும் நமது வேளாண் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ரூ.48,000 கோடி மதிப்பிலான பாசுமதி அரிசி ஏற்றுமதியாகியுள்ளது.
எதிா்காலத்தில் நமக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த விளைபொருள்களும் தேவை. இதை நிறைவு செய்யும் பொறுப்பு நமது விஞ்ஞானிகளிடம் உள்ளது. குறைந்த பரப்பளவில் அதிக நெல்லை விளைவிப்பதன் மூலம், மீதமுள்ள இடங்களில் பருப்பு, எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய முடியும். இதன்மூலம் இவற்றின் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்றாா்.
வேளாண் துறைச் செயலா், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதற்கு முன்பு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமே மரபணு திருத்த நெல் ரகங்களை உருவாக்கியுள்ளன. வேறு பல நாடுகளில் இது தொடா்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.