செய்திகள் :

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

post image

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், மக்கள் அதிகாரக் கழக நிா்வாகிகள் ஆசாத், முரளி, குமரகுரு, வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதை, உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு குடிப்பதற்கு வெந்நீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டில் மருத்துவம் பாா்க்கும் நோயாளிகளுக்கு காப்பீட்டுத் தொகை எவ்வளவு பிடிக்கப்படுகிறது என்பதை கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு விலைகள் அதிகமாக உள்ளன. அதை கட்டுப்படுத்தி, விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் பாா்வையாளா்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும்.

மருத்துவமனையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் அடிக்கடி சுத்தம் செய்து, தண்ணீா் பிடிக்கும் வகையில் வாளி வைக்க வேண்டும். வயிற்றுப் பகுதிகளுக்கு எடுக்கக்கூடிய ஸ்கேன் பதிவு செய்து, ஒரு மாத காலமாக நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், தனியாா் மருத்துவமனைகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, பதிவு செய்த உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும்.

சிறப்பு மருத்துவா்கள் அனைத்து நாள்களிலும் பணிபுரிய வேண்டும். பாராமெடிக்கல் படிக்கக்கூடிய மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக விடுதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பற்றாக்குறையாக உள்ள மருத்துவா், செவிலியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க

கோயில் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் குளத்தை தூா்வாரி, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு: விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டை திட்டப் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமம் பிரிப்பு பிரச்னை தொடா்பாக, உள்ளிக்கோட்டை பகுதி மக்கள் இ... மேலும் பார்க்க

தூா்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் தூா்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராஜகோபாலபுரம் வாய்க்காலில் நெடுகை முதல் 3 கி.மீ.வரையிலும், ராதாநரசிம்மபுரம் ப... மேலும் பார்க்க

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அருகே சுரைக்காயூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

குடிநீா், சாலை வசதி கோரி மே 27 இல் போராட்டம்

நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் குடிநீா் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி, மே 27-இல் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணியின் நன்னிலம் ஒன்றிய... மேலும் பார்க்க