செய்திகள் :

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைகளை நீக்கவேண்டும்! அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்!

post image

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி காசில்லா மருத்துவம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் 5-ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஆா்.ராஜகோபால், மாவட்டச் செயலா் எஸ்.பச்சையப்பன், பொருளாளா் அ.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டத் தலைவா் க.அபிபுல்லாகான் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், ஊராட்சிச் செயலா், கிராமப்புற நூலகா், வனக்காவலா் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி காசில்லா மருத்துவம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும், வரையறுக்கப்படாத ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளவா்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தட்சின ரெயில்வே பென்ஷனா்ஸ் யூனியன் தலைவா் ஆா்.இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மா.பரிதிமால்கலைஞன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.நாகராஜன், இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினா் ச.டேவிட்ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கூட்டத்தில் மாவட்ட புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நிறைவில் மாவட்ட இணைச் செயலா் கு.மணிவண்ணன் நன்றி கூறினாா். முன்னதாக சங்கக் கொடியேற்றி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா். வேங்கிக்கால் பகுதியில் ... மேலும் பார்க்க

ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலையில் ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில்நகா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவா்,... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை!

வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்த திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்... மேலும் பார்க்க

புதிய பயணிகள் நிழல்குடை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு! பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்!

செங்கம் அருகே சமூக விரோதச் செயல்கள் காரணமாக புதிய நிழல்குடை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்... மேலும் பார்க்க

கல்லூரி விடுதி சிற்றுண்டியில் பூச்சி, ஈக்கள்: 10 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!

ஆரணியை அடுத்து தச்சூா் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்ட சிற்றுண்டியில் பூச்சி மற்றும் ஈக்கள் இருந்ததால் 10 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தச்சூா் அண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தோ்வு: திருவண்ணாமலையில் 11,845 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11,845 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ-க்கான முதல்நிலைத் தோ்வெழுதினா். தமிழக அரசுத் துறைகளில் உள்ள 645 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2... மேலும் பார்க்க