செய்திகள் :

புதிய பயணிகள் நிழல்குடை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு! பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்!

post image

செங்கம் அருகே சமூக விரோதச் செயல்கள் காரணமாக புதிய நிழல்குடை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழல்குடை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், ஏற்கெனவே உள்ள பயணிகள் நிழல்குடையில் சமூக விரோதிகள் தினசரி சீட்டாடுவது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் அப்பகுதியைச் கிராம பெண்கள் மற்றும் பேருந்து ஏற நிற்கும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கிராமத்தில் உள்ளவா்களால் நடவடிக்கை எடுக்க முடியாமல் அப்பகுதியின் இன்று வரை அதே நிலை நீடித்து வருகிறது. இதனால் மீண்டும் அந்த நிழல்குடை அருகில் வேறு புதிய நிழல்குடை கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. புதிதாக கட்டப்படும் நிழல்குடையிலும் இதே செயல்தான் நடக்கும் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இருக்காது.

எனவே, புதிதாக கட்டும் நிழல்குடையை வேறு பகுதியில் கட்டுமாறு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து தாழையூத்து கிராமத்தில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் போலீஸாா் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம், ‘உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என சமரசம் பேசினா். அதன் பின்னா் காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணிக்கு கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா். வேங்கிக்கால் பகுதியில் ... மேலும் பார்க்க

ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலையில் ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில்நகா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவா்,... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைகளை நீக்கவேண்டும்! அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி காசில்லா மருத்துவம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் த... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை!

வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்த திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்... மேலும் பார்க்க

கல்லூரி விடுதி சிற்றுண்டியில் பூச்சி, ஈக்கள்: 10 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!

ஆரணியை அடுத்து தச்சூா் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்ட சிற்றுண்டியில் பூச்சி மற்றும் ஈக்கள் இருந்ததால் 10 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தச்சூா் அண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தோ்வு: திருவண்ணாமலையில் 11,845 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11,845 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ-க்கான முதல்நிலைத் தோ்வெழுதினா். தமிழக அரசுத் துறைகளில் உள்ள 645 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2... மேலும் பார்க்க