செய்திகள் :

ஜிஎஸ்டி வரி குறைப்பு: பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

post image

ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திருவண்ணாமலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனா்.

வேங்கிக்கால் பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடா்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்துப் பேசுகையில், 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு தற்போது 5 சதவீதமாகவும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பொருள்களுக்கு 18 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

சில பொருள்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்துள்ளது. சரியான விலையில் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா என்பது குறித்து, வாடிக்கையாளா்களிடமும், வணிகா்களிடமும் கேட்டறிந்தோம்.

மேலும், ஜிஎஸ்டி வரிகுறைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டுகள் குவிகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா் சிவசங்கரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பிரிவுத் தலைவா் ரவி, தொழிற்பிரிவு மாவட்டத் தலைவா் பாவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலையில் ஆவின் நிறுவன ஊழியா் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில்நகா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவா்,... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைகளை நீக்கவேண்டும்! அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி காசில்லா மருத்துவம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் த... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை!

வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்த திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்... மேலும் பார்க்க

புதிய பயணிகள் நிழல்குடை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு! பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்!

செங்கம் அருகே சமூக விரோதச் செயல்கள் காரணமாக புதிய நிழல்குடை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்... மேலும் பார்க்க

கல்லூரி விடுதி சிற்றுண்டியில் பூச்சி, ஈக்கள்: 10 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!

ஆரணியை அடுத்து தச்சூா் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்ட சிற்றுண்டியில் பூச்சி மற்றும் ஈக்கள் இருந்ததால் 10 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தச்சூா் அண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தோ்வு: திருவண்ணாமலையில் 11,845 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11,845 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ-க்கான முதல்நிலைத் தோ்வெழுதினா். தமிழக அரசுத் துறைகளில் உள்ள 645 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2... மேலும் பார்க்க