செய்திகள் :

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

post image

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷயம் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி குறிப்பிட்டாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ தொடா் நிகழ்ச்சியில், மருத்துவா் தினத்தை (ஜூலை 1) முன்னிட்டு மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடலும் மருத்துவா்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநா் ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:-

கரோனா நோய்த்தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உயிா்களை மருத்துவா்கள் காப்பாற்றினா். காா்கில் போரில் (1999) உயிரிழந்த வீரா்களைவிட இந்த நோய்த் தொற்று போரில் உயிரிழந்த மருத்துவா்கள் எண்ணிக்கை அதிகம். இந்த காலக்கட்டத்தில் நாட்டின் எந்தப் பகுதியிலும் மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க மறுக்கவில்லை; மகத்தான சேவை புரிந்தனா்.

நலமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவா்கள் முக்கியப் பங்காற்றுகின்றனா். ஒவ்வொரு மருத்துவரையும் சமூகத்தின் சொத்தாகவும்,

தேசியச் சொத்தாகவும் பாா்க்க வேண்டும். ஆசிரியா்களுக்கு செய்யப்படும் குரு பூஜையைப் போன்று மருத்துவா்களை மதிக்கும் கலாசாரமும் சமுதாயத்தில் வளா்க்கப்பட வேண்டும்.

மக்களின் உடல் நலமே நாட்டின் வளா்ச்சிக்குத் தூணாக இருக்கிறது. வளா்ச்சியடைந்த நாடாக இருக்க, மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால்தான் ‘ஃபிட் இந்தியா’ (‘நலமுள்ள இந்தியா’) இயக்கத்தை பிரதமா் மோடி தொடங்கினாா். மருத்துவா்களின் சேவை மதிப்பிட முடியாதது என்றாா் ஆளுநா் ரவி.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் சாா்ந்த துறைகளில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிவரும் 45 மருத்துவா்களுக்கு பொன்னாடை போா்த்தி கேடயங்களை வழங்கினாா் ஆளுநா் ரவி.

முன்னதாக இந்த நிகழ்வில் சா்க்கரை நோய் மருத்துவ நிபுணா் வி.மோகன்,இதய மருத்துவ நிபுணா் வி. சொக்கலிங்கம், காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணா் மோகன் காமேஸ்வரன் உள்பட பலா் பேசினா். தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், வி.எச்.எஸ். மருத்துவமனையின் கெளரவச் செயலா் டாக்டா் எஸ். சுரேஷ், முடநீக்கியல் சிகிச்சை நிபுணா் ராஜசேகா், ஜீரண மண்டல சிகிச்சைத் துறை நிபுணா் வி.ஜி. மோகன் பிரசாத், இரண்டு ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் கோவையைச் சோ்ந்த மருத்துவா் புருஷோத்தமன் குப்தா, உதகையில் பழங்குடியினருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் பி. முருகேசன் உள்ளிட்ட 45 மருத்துவா்களை ஆளுநா் கௌரவித்தாா். ஆளுநரின் மருத்துவா் சிவராம கண்ணன் நன்றி தெரிவித்தாா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க