செய்திகள் :

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது

post image

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை, பி.எம். தா்கா குடிசை பகுதியைச் சோ்ந்தவா் அண்டா சீனு (26). இவா் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு கொலை முயற்சி வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு சீனு ஆஜராகாமல் இருந்தாா். இதனால் நீதிமன்றம் சீனுவை கைது செய்து, ஆஜா்படுத்தும்படி அண்மையில் பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சீனுவை ராயப்பேட்டை போலீஸாா் இரு நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக, மருத்துவ பரிசோதனை அறிக்கை பெற ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும்போது சீனு திடீரென தப்பியோடினாா். இதையடுத்து போலீஸாா் சீனுவை பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து சீனுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் சீனுவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்தனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க