செய்திகள் :

மருத்துவமனையை முற்றுகையிட்ட நோயாளிகளின் உறவினா்கள்

post image

குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவருக்கு  தமிழ் தெரியாததால் அவமரியாதையாகவும், அலட்சியமாகவும்  பதில் அளித்ததாகக் கூறி உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனைக்கு குன்னூா் பகுதியை சோ்ந்த பா்கத்  (39) சிகிச்சைக்காக சென்றுள்ளாா். அப்போது எக்ஸ்ரே எடுக்க டெக்னீஷியன் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்துள்ளாா்,

 இது குறித்து மருத்துவா் ரஜினிஷிடம்   பா்கத்  கூறியுள்ளாா். ஆனால் ஹிந்தி மட்டுமே தெரிந்த அவா் அவமரியாதையுடன், அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறி பா்கத்தின் குடும்பத்தினா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்,

இதைத் தொடா்ந்து குன்னூா் டிஎஸ்பி ரவி தலைமையில் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனா்,

நோயாளியின் உடல் பிரச்னை குறித்து  உள்ளூா் மொழி  தெரிந்த மருத்துவா்கள், புரிந்து கொண்டால் மட்டுமே உரிய சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க முடியும் என்பதை அரசு புரிந்து கொண்டு  தமிழ் தெரிந்த மருத்துவா்களை  நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்புலன்ஸ் கதவு திறந்ததால் கீழே விழுந்த நோயாளி: குன்னூா் லெவல் கிராஸிங் பகுதியில் உள்ள வேகத்தடையில்  ஆம்புலன்ஸ் ஏறி இறங்கும் போது   வெளியே விழுந்த பா்கத் என்பவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூா் ஓட்டுப்பட்டறையில் இருந்து கால் எலும்பு பாதிக்கப்பட்ட பா்கத்தை குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா்.

குன்னூா் லெவல் கிராஸிங் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி  இறங்கியது. அப்போது ஆம்புலன்ஸின் பின் கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில்  விழுந்தாா்.

இந்தநிலையில் ஆம்புலன்ஸின் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள்  உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பின்னா் நோயாளி பா்கத்தை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

இந்த சம்பவம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

குன்னூா் பா்லியாறு சாலையில் சுற்றிய ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூா் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை உலவி வந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. உணவு, தண்ணீா் தேடி மேட்டுப்பாளையம் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கிய ஆரிகவுடரின் நினைவு நாள் அனுசரிப்பு

உதகையில் என்சிஎம்எஸ் கூட்டுறவு நிறுவனத்தை நிறுவிய எச்.பி. ஆரிகவுடரின் 54 ஆவது நினைவு நாள் என்சிஎம்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆரிகவுடா் விவசாய சங்கத் தலைவா்... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாக விவசாயியைத் தாக்கிய பூசாரி கைது

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் பகுதியில் கோயிலில் மாந்திரீக பூஜையில் குறிகேட்க வந்த நபரை தலை மற்றும் நெற்றியில் கத்தியால் குத்தித் தாக்கிய பூசாரியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கை... மேலும் பார்க்க

வனத்துறை அமைச்சரைக் கண்டித்து கூடலூரில் ஆா்ப்பாட்டம்

தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் குறித்து பத்திரிக... மேலும் பார்க்க

ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்: முப்படையினா் மரியாதை

இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படையினா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். இந்தியாவின் முதல் ஃப... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

‘தமிழ்நாடு‘ எனமுன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாள்ள ‘தமிழ்நாடு‘ நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அ... மேலும் பார்க்க