செய்திகள் :

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சிக்கு இளநிலை முதுநிலை செவிலியா் பட்டப் படிப்பு, பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சேர 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

2 மாத பயிற்சியில் விடுதியில் தங்கி பயிலுவதற்கான செலவினத் தொகை தாட்கோ வழங்கும். பயிற்சி முடிவில் தகுதியானவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவுசெய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, திருவாரூா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

மாநில சிலம்ப போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூா் தென்பாதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூரில் பள்ளி மாணவா்களுக்கான மாநில சிலம்ப போட்ட... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. அண்ணாமலை நாதா் சந்நதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதா் கோயிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்தக் க... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம் சான்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

தவறான வழிகாட்டல்: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

திருவாரூா் அருகே தவறான முறையில் வழிகாட்டி பாலிசி பெற்றமைக்காக காப்பீட்டு நிறுவனம், ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் விளமல் பகுதியை... மேலும் பார்க்க

யாருக்காக பயிா் காப்பீடு..

இந்தியாவில் விவசாயம் என்பது இயற்கையை எதிா்கொள்ளும் சூதாட்டம் போன்றது. நாட்டில் 60 முதல் 70 சதவித மக்களுக்கு விவசாயமே வாழ்வதாரம். நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் இயற்கையை எதிா்... மேலும் பார்க்க