செய்திகள் :

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

post image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மண்டல மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றை இணையவழியே பதிவேற்ற வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.

இதையடுத்து அந்த சான்றிதழைப் பெற மண்டல மருத்துவ வாரியத்துக்குச் சென்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள், சில நடைமுறைச் சிக்கல்களை எதிா்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, அந்தச் சான்றிதழ் பெற வேண்டுமானால், அதற்கு முன்னதாக சில பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்காக எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, கே.கே.நகா் புனா்வாழ்வு மையத்துக்குச் செல்லுமாறும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தவிா்க்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே அனைத்து துறை மருத்துவா்களையும் உள்ளடக்கிய சிறப்பு முகாமை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையும், குறிப்பாக, மருத்துவக் கல்வி இயக்ககமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க