செய்திகள் :

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

post image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) இன்று காலை அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்திருப்பதாவது:

“கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி நாகலாந்தில் மிகப்பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.

தற்போதைய அறுவைச் சிகிச்சையின் காரணமாக, அந்த பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகிறது.

Congress President Mallikarjuna Kharge admitted to hospital

இதையும் படிக்க : அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வய... மேலும் பார்க்க

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்... மேலும் பார்க்க